பெண்ணிற்கு பாலியல் தொல்லை ! புகாரால் சிக்கிய ஆன்லைன் கும்பல்

Published by
பால முருகன்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சேர்ந்தவர் 38 வயது பெண் இவருக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் மேலும் இவருக்கு 17 வயதுடைய மகன் மற்றும் 15 வயதுள்ள ஒரு மகளும் உள்ளனர் , இந்த நிலையில் இவரை சகாபுதீன் என்பவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார் .

மேலும் இருவர் தனிமையில் இருந்ததை சகாபுதீன் உட்பட மூன்று பேர் வீடியோக்கள் எடுத்து வைத்துள்ளனர், மேலும் பல பெண்களுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி தனிமையில் இருந்தது அந்த பெண்ணிற்கு தெரியவந்தது அந்தப் பெண்ணும் அவரை விட்டுப் பிரிந்துள்ளார் , இதனைத் தொடர்ந்து அப்பெண்ணுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை வைத்துக் கொண்டு சகாபுதீன் உட்பட சிலர் மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் கண்காணிப்பாளரிடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் காரணமாக காவல்துறையினர் விசாரணை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது, பாதுஷா மற்றும் சகோதரர் ஷாஜி ஆகியோர் ஆன்லைன் சேவை மையத்தில் செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய வரும் வாடிக்கையாளர்களில் சிலரின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பது தெரியவந்தது மேலும் இவர்கள் அனைவரும் சேர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் அவரது நண்பர் ஆலிம்மிற்கு புகைப்படங்களை அனுப்புவார், அவர் ஏர்வாடியில் உள்ள சில பேருக்கு வாட்ஸாப் மூலம் அனுப்புவார்.

இந்த நிலையில் அந்த கடையில் இருந்து 4 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் பாதுஷா மற்றும் சகாபுதீன் இருவரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

19 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

39 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

1 hour ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

3 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago