அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து பெற இறுதி முடிவினை தெரிவிக்க மாநில அரசுக்கு மத்திய அரசு கெடு…

Published by
Kaliraj

கடந்த ஆண்டு  மத்திய அரசு நாட்டில் உள்ள  முக்கிய ஐந்து  பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடிவு செய்து அதனை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் முடிவு குறித்து ஆராய  தமிழக அரசு 5 அமைச்சர்கள் கொண்ட ஒரு குழு ஒன்றை அமைத்தது. இதனை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைகழகம் , சீர்மிகு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும்  அண்ணா பல்லைக்கழகம் என இரண்டாக பிரிக்கப்படும் என்று  தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் சிறப்பு அந்தஸ்த்தை ஏற்பது குறித்து தமிழக அரசு இறுதி முடிவெடுக்கவில்ல்லை. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டால் தமிழகத்தில் தற்போது வரை பின்பற்றப்பட்டு வரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை பின்பற்ற அனுமதிக்கப்படுமா? என்பதில் மத்திய அரசு உறுதியான பதிலை தமிழக அரசுக்கு தற்போது வரை  தெரிவிக்கவில்லை என்கிற காரணம் தமிழக அரசின்  தரப்பில் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து குறித்த தனது முடிவினை தமிழக அரசு வரும் 31-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த   சிறப்பு அந்தஸ்து  அண்ணா பல்கலை கழகத்திற்கு வழங்கப்பட்டால் மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்கு ஆயிரம்  கோடி ரூபாயும் தமிழக அரசு ஐந்தாண்டுகளுக்கு 500 கோடி  என மொத்தம் 1,500 கோடி சிறப்பு அந்தஸ்த்தின் வாயிலாக கிடைக்கும். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படவுள்ள சிறப்பு அந்தஸ்த்தினை தமிழக அரசு ஏற்காவிட்டால்  நாட்டில் உள்ள வேறொரு பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்படும்  என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

56 minutes ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

1 hour ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

12 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

13 hours ago