3வது முறை பிரதமராகும் மோடி.! தோல்வி பயத்தில் காங்கிரஸ்.! அண்ணாமலை பேட்டி.

Published by
பால முருகன்

அண்ணாமலை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூன் 1 ( இன்று) காலை திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வருகை தந்தார். சுவாமி தரிசனம் முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பெண்டு செய்யப்படுவது குறித்தும், பிரதமர் மோடி தியானம் செய்ய கன்னியாக்குமரிக்கு சென்றது பற்றியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி இறுதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது பற்றியும் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை ” பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகவேடண்டும், தமிழக மக்கள் நன்றாக நலமுடன் இருக்கவேண்டும் என்று வேண்டி கோவிலுக்கு வந்தேன். போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் கடைசி நாளில் அவர்களை சஸ்பெண்டு செய்வது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டும் தான் காரணம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. எனக்கு இதனை பற்றி முழு விவரம் தெரியாது. ஆனால், நீதிமன்றம் இதனை பார்த்துக்கொள்ளும்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஜூன் 1 இன்று இந்தியா கூட்டணி இறுதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கடைசியில் அந்த கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகவில்லை. எந்த கட்சியும் போகவில்லை கட்சியினுடைய இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டும் போயிருக்கிறார்கள். அதைப்போல, காங்கிரஸ் கட்சியில் இருந்து “Exit Poll-க்கு தனது செய்தி தொடர்பாளர்களை அனுப்ப மாட்டோம் என்று அறிக்கை விடுகிறது. இதில் இருந்து என்ன தெரிகிறது? இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 543 தொகுதிகளும் யார் பக்கம் செல்லும் என மக்களுக்கு தெரியும்.

ஆனால் அதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா கூட்டணி இறுதி ஆலோசனை கூட்டத்திற்கு ஸ்டாலின் போறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் போகவில்லை. ஏனென்றால், அவர்களுக்கும் தெரியும். தேர்தல் நடக்கும் வரை மட்டும் தான் அவர்களால் நாடகம் நடத்த முடியும். தேர்தல் நடந்து முடிந்த பிறகு எல்லோருக்கும் தெரியும் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சி அமைக்க போகிறார் என்று. பிரதமர் மோடி தனிப்பட்ட வகையில் கன்னியாகுமரி வந்து இருக்கிறார். அவருடன் பாஜக கட்சியின் தொண்டர் ஒருவர் கூட வரவில்லை.

கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறைக்கு செல்லவேண்டும் என்றால் அரசின் அனுமதியோ அல்லது தேர்தல் ஆணையத்தின் அனுமதியோ வேண்டும் என்று இல்லை. பிரதமர் மோடி தியானம் செய்ய விவேகானந்தர் பாறைக்கு வந்த காரணத்தால் அங்கு இருந்த  மக்கள் தடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் எதனை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் பிரதமர் மோடியின் தியானம் செய்வது குறித்து விஷமத்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்” எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

25 minutes ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

1 hour ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

2 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

2 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

2 hours ago

LSG vs GT: இறுதி வரை போராட்டம்.. வீன் போன ஷாருக் அரைசதம்.. லக்னோ மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

9 hours ago