இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதியின் எம் பி ரவிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகிய அமைச்சர்களும், காங்கிரஸ் மாநில தலைவரான கே. எஸ். அழகிரியும், திமுக எம்எல்ஏ சரவணனும் கோரிக்கை வைத்துள்ளனர்.அதற்கான ஆலோசனையை அரசு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவிக்க வேண்டும் என்று விழுப்புரம் தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, தற்போது ஆளும் பாஜக அரசு பாராளுமன்றத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதில் முனைப்புடன் உள்ளது. ஏற்கனவே சிறப்பு வாய்ந்த கட்டிடம் ஒன்று பாராளுமன்றத்திற்கென இருக்கையில் புதிதாக கட்ட வேண்டிய தேவை இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அதை அவர்கள் கேட்பதாக இல்லை. இந்தியாவில் இரண்டாவதாக நாடாளுமன்ற கட்டிடம் ஒன்று கட்ட வேண்டும் என்றால் அதை சென்னையில் கட்டுங்கள். குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்துங்கள். வடமாநிலங்களை சேர்ந்த எம்பிக்கள் தென்னிந்திய பண்பாட்டை, வளர்ச்சியை நேரில் பார்த்து தமது மாநிலமும் இப்படி முன்னேற வேண்டும் என்ற உணர்வை பெறட்டும். இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவியுங்கள். அதிகார பரவலாக்கத்துக்கு அது அடையாளமாக திகழும் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு பலர் ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…