மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பொறுப்புடன் கூடுதலாக பொதுச்செயலாளர் பொறுப்பையும் கமல்ஹாசன் ஏற்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகினர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகளுடன் கமல்ஹாசன் இன்று காலை காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் பொறுப்புடன் கூடுதலாக பொதுச்செயலாளர் பொறுப்பையும் கமல்ஹாசன் ஏற்கிறார். மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசகர்களாக பழ.கருப்பையா, வெ.பொன்ராஜ் நியமனம். துணைத் தலைவராக ஏ.ஜி.மவுரியா, நிர்வாகக் குழு உறுப்பினராக நடிகை ஸ்ரீபிரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…