Supreme Court of India. File. | Photo Credit: Sushil Kumar Verma
கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு.
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்வது குறித்து இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் சஞ்சய் கரோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வரப்பெற்றது.
இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறங்காவலர்கள் நியமனம் செய்திட மாவட்டக் குழு அமைத்து அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மற்றும் திருக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணைகளின் நகல்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்விசாரணையின்போது அறங்காவலர்களை நியமனம் செய்திட தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை நீதியரசர்கள் பாராட்டியதுடன் விரைவில் அனைத்து திருக்கோயில்களுக்கும் அறங்காவலர்கள் நியமனம் செய்திட அறிவுறுத்தி, வழக்கினை ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…