பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் முதல்வரிடம் ஆலோசித்து பணி நியமன ஆணையம் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.
கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 41 பேர் கணினி பழுதானதால் செல்போன் மூலமாக தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மறு தேர்வு வைக்க உத்தரவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடை இல்லை என்று தெரிவித்தது. இதையடுத்து, தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை கோபியில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த பட்டதாரி ஆசிரியர்களிடம், 2018-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் முதல்வரிடம் ஆலோசித்து பணி நியமன ஆணையம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…