பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று வெளியான செய்தி போலியானது என்று அரசு விளக்கமளித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது .மத்திய அரசு சமீபத்தில் பல தளர்வுகளை அறிவித்த பின்னரும், பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசு செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகள் மூடப்படிருக்கும் என்று அறிவித்தனர்.
மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் அவர்களும் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த இக்கட்டான சூழலில் பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் நிலையில் மக்கள் செய்தித்தொடர்பு மூலம் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை போன்ற செய்தி குறிப்பு ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. அதில் பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முககவசம் அணிவது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததோடு, அந்த செய்தி குறிப்பு போலியானது என்றும், மக்கள் செய்தித்தொடர்பு அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…