சாலை விதியை மீறுபவர்களா நீங்கள் ?அப்படி மீறினால் உங்கள் வீட்டிற்கே அபராத ரசீது வரும் !

சாலை விதிகளை அனைவரும் மதித்து நடத்தால் நமக்கு தான் பாதுகாப்பு.அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு  சென்னை காவல் துறையினர் புதிய

சாலை விதிகளை அனைவரும் மதித்து நடத்தால் நமக்கு தான் பாதுகாப்பு.அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு  சென்னை காவல் துறையினர் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.அந்த வகையில்  சென்னையில் உள்ள அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிநவீன கேமரா ஒன்றை அமைத்துள்ளனர்.இந்த அதிநவீன கேமரா போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகனம் கேமராவை கடந்து செல்லும் பொது அந்த வாகன பதிவு எண் மற்றும் அவரை காட்டிக்கொடுக்கும்.இதன்மூலம் காவல்த்துறையினர் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு அபராத ரசீது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்து அபராதம் வசூலிப்பார்கள். இதனை  டிஜிபி ராஜேந்திரன் சென்னையில் நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார்.