நவீன தமிழகத்தை வடிவமைப்பதில் கலைஞர் மு. கருணாநிதி மகத்தான பங்களிப்பு கொண்டிருந்தார் – ராகுல் காந்தி!

Published by
Rebekal

நவீன தமிழகத்தை வடிவமைப்பதில் கலைஞர் மு. கருணாநிதி மகத்தான பங்களிப்பு கொண்டிருந்தார் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐந்து முறை முதல்வராக பதவி வகித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மூன்றாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்களும் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் உங்கள் தந்தை தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவு நாளில், நவீனத்துவத்தை வடிவமைத்தில் அவரது மகத்தான பங்களிப்பை நான் கௌரவிக்க விரும்புகின்றேன் எனவும், கலைஞர் கருணாநிதி அவர்கள் சமூக புரட்சியின் முக்கிய கலைஞர்களில் ஒருவர் மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நமது கூட்டாட்சி அரசியல் பல்வேறு இடங்களில் அங்கீகாரம் பெறுவதற்கு போராடியவர். இவர் அமைத்த அடித்தளம் தான் மக்கள் தங்கள் துணை கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கிறது. மேலும் உங்கள் தந்தையின் வீரமிக்க வாழ்க்கை போராட்டம் ஒரு வலிமையைக் கொடுக்கிறது எனவும், அவர் நமக்கு வழிகாட்டியாக இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

rahulgandhi

Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

6 hours ago