விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில், நேரு தெரிவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை வந்த வங்கி ஊழியர்கள் ஏடிஎம் எந்திரத்தின் சாவியை அந்த எந்திரத்திலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
நேற்று காலை 10 மணிக்கு வந்த நபர் ஒருவர், அந்த சாவியை கண்டவுடன் அதனை திருடி எடுத்து சென்றுவிட்டு, இரவில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஏடிஎம்-ஐ கொள்ளையடித்துவிடலாம் என எண்ணி இரவில் சாவி போட்டு ஏடிஎம்-ஐ திருட முயற்சித்துள்ளான். அந்த நேரம் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து அலாரம் சத்தம் கேட்டதால், பதறி அங்கிருந்து ஓடிவிட்டான். ஆனால் இவை அத்தனையும் ஏடிஎம் எந்திரத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிந்து வைத்துள்ளது.
பின்னர் திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனின் வங்கி ஊழியர்கள் இந்த திருட்டு முயற்சி சம்பவம் குறித்து புகாரளித்தனர். இதனை தொடர்ந்து, சிசிடிவி காமிரா மூலம் ஆராய்ந்து, அந்த திருடனை போலீசார் கைது செய்தனர். அந்த திருடன் பெயர் சுகுனந்தன். இவர் திண்டிவனத்தை சேர்ந்தவர்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…