நடக்கிறது தரங்கெட்ட ஆட்சி.! எடுத்துக்காட்டு டி.என்.பி.எஸ்.சி முறைகேடு.! திமுக இளைஞரணி செயலாளர் கடும் விமர்சனம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கோரிக்கையைச் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய அவர்,  தரங்கெட்ட ஆட்சி நடைபெறுவதற்கு எடுத்துக்காட்டு டி.என்.பி.எஸ்.சி முறைகேடு என கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்தில் குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் குருப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. அதில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத டி.என்.பி.எஸ்.சி. தடை விதித்தது. பின்னர் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை செய்ததில் இடைத்தரகர், தேர்வர்கள் என 16 பேரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதியாகியுள்ளது.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே திமுக கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கோரிக்கையைச் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய அவர்,  தரங்கெட்ட ஆட்சி நடைபெறுவதற்கு எடுத்துக்காட்டு டி.என்.பி.எஸ்.சி முறைகேடு என கடுமையாக விமர்சித்தார். இதைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை மாற்றவில்லை என்றால், வேறுவிதமான போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் எச்சரித்தார். இந்த போராட்டத்தில், திமுக இளைஞரணியினர், மாணவரணியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

58 minutes ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago