தமிழகத்தில் வங்கி சேவை தொடரும் – தமிழக வங்கி குழுமம் அறிவிப்பு

Published by
Edison

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வங்கி சேவை தொடரும் என தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றானது தீவிரமடைந்ததால்,அதனைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருந்தது.எனினும்,கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரிப்பதால் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதன்காரணமாக,மளிகை,காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும்,குறிப்பிட்ட அவசர தேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,”இன்று முதல் மே 31-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கி சேவைகள் தொடர்ந்து செயல்படும். ஆனால்,வங்கி கிளை ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும்.

நிர்வாக, கோட்ட, மண்டல அலுவலகங்கள் வழக்கமான பணி நேரங்களில் பணியாற்றவேண்டும்.மேலும்,வங்கிகள் தொடர்ந்து சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை கொண்டு இயங்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல்,பணம் எடுத்தல், பணம் செலுத்துதல்,என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். உள்ளிட்ட பல்வேறு முறைகளில் பணம் அனுப்புதல்,அரசு தொடர்பான வர்த்தகம் போன்ற அத்தியாவசிய அடிப்படை சேவைகளை வங்கி கிளைகள் வழங்கவேண்டும்.

ஏ.டி.எம். இயந்திரம் உள்பட பண சுழற்சி சேவைகள் அனைத்து நேரங்களிலும் முழுமையாக இயங்குவதை வங்கிகள் உறுதி செய்யவேண்டும்.

மேலும் முகக்கவசம் அணிவது,சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கொரோனா தடுப்பபு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்”, என்றும் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

5 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

6 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

6 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

7 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

8 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

8 hours ago