தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி, நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பல கருத்துகளை தெரிவித்து இருந்தார். முக்கியமாக பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விஷயத்தில் யாரை தண்டிக்க வேண்டுமோ அவர்களை தண்டிக்க வில்லை எனவும், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு அவர்களை உட்கார வையுங்கள் எனவும் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது ஆளும் கட்சியினர் மத்தியில் விமர்சனங்களை உண்டாக்கியது.
தற்போது தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் கல்வி நிறுவனங்களில் ஒரு அரசியல் சினிமா சார்ந்த நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதி கொடுக்கலாம் என கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு கல்லூரி தரப்பில் இருந்து, விழா நடைபெற்ற அந்த ஆடிட்டோரியம் கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஏற்கனவே அங்கு பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எனவும் கல்ல்லூரி நிர்வாகம் தரப்பில் குறிப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…