சமீபத்தில் பிகில் திரைப்பட இசை வெளியிட்டு விழா தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.இந்த விழாவில் விஜய் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜய்க்கு கே.எஸ் அழகிரி ஆதரவு தெரிவித்து உள்ளார். நடிகர் விஜய் பொதுவாக பேசியதை அதிமுகவினருக்கு எதிராக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் புரிந்து கொண்டார் என கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.
மேலும் அழகிரி கூறுகையில் ,நடிகர் விஜய் எந்த அரசியல் கட்சி சாராதவர். லட்சக்கணக்கான இளைஞர்களால் ஈர்க்கப்பட்ட இளம் கலைஞர் விஜய் .நடிகர் விஜய் அரசியல் பேசியதற்காக கல்லூரி நிர்வாகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது.
எனவே கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை திரும்ப பெறாவிட்டால் கடும் விளைவுகளை ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…