"கைதி" மற்றும் "பிகில்" படத்திற்கு எத்தனை திரையரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது..!

Published by
Vidhusan

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “கைதி” படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. தற்போது கைதி படத்தின் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பிகில்” படமும் தீபாவளி அன்று தான் திரைக்கு வருகிறது. இத்துடன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாகவுள்ள நிலையில் திரையரங்கு கிடைக்காது என்பதால் சங்கத்தமிழன் விலகியது. தற்போது பிகில் படத்திற்கும் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளி அன்று “கைதி” மற்றும் “பிகில்” படத்திற்கு எத்தனை திரையரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில், பிகில் படத்திற்கு 700 திரையரங்குகளும் கைதி படத்திற்கு 300 திரையரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வைரலாக பேசப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Vidhusan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

2 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago