கேரளாவில் கோழிக்கோடு அருகே பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லையில் அனைத்து லாரிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து கோழிப்பண்ணைகளியும் தீவிர சோதனையிடப்பட்டு வருவதாக கூறினார். இதனிடையே கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கிருந்த 12 ஆயிரம் கோழி, வாத்துகள் அழிக்க உத்தரவிட்டுள்ளதுடன், 1 கி.மீ. சுற்றுப்பரப்பிலுள்ள வாத்து, கோழிகளையும் அழிக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து வேங்கேரி, கொடியத்தூரில் உள்ள 2 கோழி பண்ணைகளில் உள்ள கோழி, வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவை பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அறிந்து, பரவாமல் தடுக்க அந்த இரண்டு பண்ணைகளில் இருந்தும் சுமாா் 12 ஆயிரம் கோழி, வாத்துகள் அழிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…