திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை கண்டித்து பாமகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கலிவரதன் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், கலிவரதன் பாமக நிறுவனர் ராமதாஸை ஒருமையில் பேசியதாக கூறி பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக உள்ள நிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலிவரதன் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர், பாமக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாமகவில் இருந்து விலகி திமுகவிலும், பின் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…