மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்.
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை பாஜக நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்துள்ளனர். துணைத்தலைவர் விபி துரைசாமி தலைமையில் பாஜக பட்டியல் அணி மாநில நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
இத்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விபி துரைசாமி, பட்டியல் சமூகத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். வாக்கு வங்கியை தக்க வைக்கவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். மேலும், பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.10,446 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…