அடுத்த ஆண்டு சட்டசபையில் பாஜக எம்எல்ஏ-க்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கூட்டத்திற்கு எதிராக,அனைவரும் தங்களது வீட்டில் வேல் பூஜை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.இதன்படி நேற்று தமிழக பாஜக தலைவர் முருகன் தனது வீட்டில் வேல் பூஜை நடத்தினார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் அரசு கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
கறுப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை விசாரிக்க வேண்டும். கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை.ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.பாஜகவிற்கு யார் வந்தாலும் வரவேற்போம்.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக எம்எல்ஏக்கள் உறுதியாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…