திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அமமுக தலைமையில் வந்தால் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகர் இல்லத்தில் சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமமுக தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறோம். சட்டப்பேரவை தேர்தலில் அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தேர்தல் கூட்டணி முடிவானதும் தெரிவிக்கப்படும். கூட்டணி குறித்து அமமமுக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமமுக – அதிமுக இணைப்பு குறித்த யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக மற்றும் பாஜகவை கூட்டணியில் சேர்க்க தயார் என்று கூறியுள்ளார். திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அமமுக தலைமையில் வந்தால் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயார் என்றும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்கள் பிரதான நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என கூறிய அவர், அதிமுக, பாஜக எங்கள் கூட்டணியில் வர மாட்டார்கள் என்பது எல்லாருக்குமே தெரியும். எந்த கட்சி மீதும் எனக்கு ஆசை இல்லை. அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் மார்ச் 10 தேதி வரை விருப்ப மனு தரலாம் எனதெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு என்பது தேர்தலுக்கான அறிவிப்பாக இருக்கக் கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…