பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
காங்கிரஸ் -திமுகவிற்கு நீண்ட இழுபறிக்கு பிறகு சற்றுநேரத்திற்க்கு முன் காங்கிரஸ் -திமுக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை கையெழுத்தானது. அதன்படி சட்டப்பேரவை தேர்தலில் 25 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். திமுகவுடன் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தொகுதிகளின் எண்ணிக்கை அரசியல் கள நிலவரத்தை பொறுத்தது, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் கூட போட்டியிடும். அரசியலில் ஏற்றம்-இறக்கம் என்பது சகஜம்.
பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம். தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியும், எழுச்சியும் அளிக்கிறது. தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி என தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸை விட ஆபத்தான நோயாக பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது.நோயை மற்ற கட்சிகளுக்கு பரப்பி வருகிறது. என கூறினார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 48 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…