[file image]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திருவண்ணாமலையில் அறநிலையத்துறை ஒருதலை பட்சமாக தான் செயல்படுகிறது. எங்களை பொறுத்தவரை அறநிலையத்துறையை எதிர்ப்பதற்கான காரணம் எங்களுக்கு இருக்கிறது.
ஸ்ரீரங்கம் கோயில் முன்பதாக உள்ள பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பது தான் பாஜகவின் தேர்தல் வாக்குறுதி. தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகரித்துவிட்டது. ரூ.5344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். எத்தனை சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மீட்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய மரியாதையுடன் நிறுவுவோம். பொது இடத்தில பெரியார் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், கோயில் முன் இருக்க கூடாது.
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் நிதிஷ்குமாரை கண்டிக்கவில்லை – வானதி சீனிவாசன்
கொக்கு, மீன் என பேசும் அரசியல் தலைவர்கள், இன்று அந்த கொக்குக்கு இருக்கக்கூடிய பொறுமை அரசியல் தலைவர்களிடம் இல்லை. காத்திருந்த மீனை பிடிக்கும் திறன் கொக்குக்கு உள்ளது. அதேபோல பாஜக காத்துக் கொண்டிருக்கிறது. எங்களுக்கான நேரம் 2026 என்பது எங்களுக்கு முழுமையாக தெரியும்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் கடனால், தமிழகத்தில் பெரிய அளவிலான பிரச்னை வெடிக்க போகிறது. வீணாக மத்திய அரசின் மீது தமிழக அரசு பழி போடுகிறது. என் மக்கள் யாத்திரை 103 தொகுதிகளை கடந்த நிலையில் யாத்திரையின் நிறைவு நாளில் பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…