என்ன கொடுமை சார்.! அமைச்சர் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு..பொதுமக்களுடன் அரசு பேருந்தில் பயணம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • காரைக்கால் அமைச்சர் கமலக்கண்ணனின் அமுதசுரபி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்ப கேட்டுள்ளனர். அதற்கு அமுதசுரபி ஊழியர்கள் டீசல் நிரப்ப மறுத்துவிட்டார்கள்.
  • புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் இருப்பதால சகா பயணிகளுடன் அரசு பேருந்தில்  தனக்கென டிக்கெட் எடுத்துக்கொண்டு பயணித்த நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

புதுச்சேரி அரசு துறைகள் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்ப படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காரைக்காலை சேர்ந்த வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் வாகனம் நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்ப கேட்டுள்ளனர். அதற்கு அமுதசுரபி ஊழியர்கள் டீசல் நிரப்ப மறுத்துவிட்டார்கள்.

இதனிடையே நேற்று மாலை அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் கமலகண்ணன் காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு வந்து புதுச்சேரிக்கு செல்லருக்கும் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தார். பின்னர் அவருக்கான பயணம் டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு சக பயணிகளுடன் புதுச்சேரிக்கு பயணித்தார். இந்த சம்பவம் காரைக்கால் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அமுதசுரபி ஊழியரிடம் கேட்டபோது, கடந்த 4 மாதத்தில் அரசுத் துறைகளைச் சேர்ந்த வாகனங்களுக்கு ரூ.2 கோடிக்கு மேல் பாக்கிய உள்ளதால் ஜனவரி 1-ம் தேதி முதல் டீசல் வழங்க முடியாது என கூறிவிட்டதாக தெரிவித்தனர். அவ்வப்போது எரிபொருள் இல்லாத காரணத்தால் அமைச்சரின் வாகனம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

12 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

20 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

46 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

17 hours ago