அமைச்சர் பெரிய கருப்பன் மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் வெளிநடப்பு செய்துள்ளோம் என ஓபிஎஸ் பேட்டி.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வரக்கூடிய சூழ்நிலையில், இதனை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த மசோதாவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
உதகையில் தமிழக ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்து வரும் நிலையில், சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. கர்நாடகா மாநில சட்டத்தின்படி துணைவேந்தர்களை மாநில அரசின் இசைவுடன்தான் நியமிக்க முடியும். தெலங்கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது. 1923-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக சட்டம் உட்பட 13 பல்கலைக்கழகங்களின் சட்டம் திருத்தப்படவுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தது. இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், துணைவேந்தர்கள் நியமன மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்த நிலையில், அதிமுக உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு சட்டமன்ற நடவடிக்கையில் அதிமுக சார்பாக உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்ட பொழுது, அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் மரியாதை குறைவாக பேசியதால், அதிமுக சார்பாக அவரை கண்டித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். ஆளுநர் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட்டு கொண்டியிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…