#Breaking:இலங்கைக்கு உதவி;மனிதாபிமான செயல் – முதல்வர் ஸ்டாலின் நன்றி!

Published by
Edison

இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வு,உயிர்காக்கும் மருந்துகள்,எரிபொருள் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த சூழலில்,இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது எனவும்,

இந்திய தூதரகம் வழியாக தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும் என்பதால் தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்து தரக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அதோடு நிற்காமல்,இந்த தீர்மானம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.அந்த அக்கடிதத்தில், இலங்கைக்கு தமிழகத்திலிருந்து உதவிப் பொருட்களை அனுப்ப உரிய அனுமதி அளிக்க, வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.அதன்பின்னர்,வெளியுறவுச் செயலர்,தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடம் பேசி,கடந்த 16 ஏப்ரல் 2022 அன்று, மனிதாபிமான ஆதரவிற்கு அரசு திறந்திருக்கும் என்று எடுத்துரைத்தார்.

இந்நிலையில்,இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதற்காக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நன்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது நன்றி கடிதத்தில் கூறியுள்ளதாவது:”இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி.இந்த மனிதாபிமான செயல் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் மற்றும் நாடுகளுக்கு இடையே அரவணைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

 

 

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

7 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

8 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

9 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

10 hours ago