#BREAKING: ஆன்லைன் வகுப்புகள் தடைவிதிக்க -உயர்நீதிமன்றம் மறுப்பு.!

Published by
murugan

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரி சரண்யா தொடர்ந்த வழக்கை ஜூன் 20-ம் தேதிக்கு  சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள் வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றும், ஏழை மாணவர்களுக்கு சாத்தியம் இல்லை என பலர்  கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த  ஒரு மாணவரின் தாய் சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் மனுவில்,ஆன்லைன் வகுப்பால் மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடும். மேலும், ஏழை , வசதிபடைத்த மாணவர்களுக்கு இடையில் சமமற்ற நிலை உருவாகும் என கூறி இருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்து. மேலும், பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

இதையடுத்து,  சரண்யா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் ஜூன் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Published by
murugan

Recent Posts

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

16 seconds ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

2 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

2 hours ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

3 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

4 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

4 hours ago