தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்க சேனை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், தற்போதைய அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் வெற்றி பெற்றதை எதிர்த்தும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலையில் வெற்றி பெற்றதை எதிர்த்தும், அதிமுக சார்பில் பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயக்குமார் என்பவரின் வெற்றியை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோரும் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்.6-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…