அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை ஒத்தி வைக்க கோரியதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு போடப்பட்டது. இதனையடுத்து,முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.அதில்,தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் விதிமுறைகளை பின்பற்றாமல் விசாரிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும்,இந்த வழக்கில் முன்னதாக நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,ஒத்தி வைக்க கோரியதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை குறிப்பிட்டு,ராஜேந்திர பாலாஜி அவர்கள் விசாரணையை ஒத்தி வைக்க கோரியதற்கு,நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்,வழக்கு இன்னும் எண் இடப்படும் நடைமுறையே முடியவில்லை என லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…