#BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஒரே நாளில் 2,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் மீண்டும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. தமிழகத்தில் சற்று குறைந்து இருந்த பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,81,752 ஆக அதிகரித்துள்ளது. இன்று 14 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மொத்தம் இதுவரை 12,684 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் 1,352 பேர் குணமடைந்து உள்ளதால், இதுவரை 8,55,085 பேர் வீடு திரும்பியுள்ளார்கள்.

குறிப்பாக இன்று அதிகபட்சமாக சென்னையில் 815 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,983 ஆக உள்ளது. மேலும், இன்று 80,704 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 1,94,28,501 பேரின் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

3 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

5 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

5 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

5 hours ago