தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று 407 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 8731 பேர் குணமடைந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 805 பேரில் 93 பேர் வெளிமாநிலங்களில் வந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து வந்த 726 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12% பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று ஒரே நாளில் 11,865 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,21,480 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 50% கொரோனா வைரசால் இறப்பவர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கூறியுள்ளார். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 4.21 லட்சம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…