#Breaking: தவறு செய்தால் பதவி நீக்கம் – அமைச்சர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்ததாக தகவல்!!

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முதலாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து, அதிகாரிகள் வெளியே சென்ற பிறகு அமைச்சர்களுடன், முதலமைச்சர் முக ஸ்டாலின் தனியாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதாவது, அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் தங்கள் துறைகளின் நியமனங்கள், தனி உதவியாளர் நியமனங்களில் கூட வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எதாவது தொகுதிக்குள் பிரச்சனை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கட்சி பிரச்னைகளுக்காகவோ, மற்ற பிரச்னைகளுக்காகவோ காவல்துறைக்கு யாரும் நேரடியாக போன் செய்யவோ, நேரில் செல்லவோ கூடாது என்றும் மக்களுக்கு நல்ல நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பல எம்எல்ஏகளுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், நீங்கள் அமைச்சர்களாக உள்ளீர்கள். அதனால் மிகவும் நேர்மையாகவும், பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். எதாவது முறைகேடு நேர்ந்தால் பதவியில் இருந்து நீக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என கண்டிப்புடன் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.

மேலும், அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எப்போது கேட்டாலும் அதனை சரியாக சொல்ல வேண்டும். தமிழகத்தில் 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றும் நல்ல நிர்வாகத்தை கொடுத்தால் தான் மக்கள் ஆதரிப்பார்கள் எனவும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

14 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

27 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

1 hour ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

15 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

16 hours ago