தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு கட்டங்களாக நடத்த வாய்ப்பு என நேற்று தகவல் வெளியான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்றும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவில் அனைத்து கட்சியினரும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர் என தெரிவித்தனர். இந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…