மயிலாடுதுறையில் நேற்று ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டதைக் கண்டித்து சட்டப் பேரவையில் இருந்து தற்போது அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.குறிப்பாக,தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனக் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதனிடையே,ஆளுநருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது தமிழக காவல்துறையின் மீது விழுந்த கரும்புள்ளி என்று சட்டப் பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில்,ஆளுநர் வாகனம் செல்லும் வழியில் இருந்த போராட்டக்காரர்கள் முன்பே அப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,பேரவையில் தொடர் முழக்கங்களை எழுப்பிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்நிலையில்,மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கமளித்து வருகிறார்.பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆளுநர் தரப்பில் தமிழக டிஜிபிக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் முதல்வர் விளக்கமளிக்கிறார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…