சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிக புகை இருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ மற்ற வார்டுகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் சிகிச்சை பிரிவில் 3 நோயாளிகள் இருந்த நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட இடம் புகை மூட்டமாக காணப்படும் நிலையில் திடீரென ஒரு சிலிண்டர் வெடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மின் விபத்து ஏற்பட்ட பகுதியில் நோயாளிகள் யாரும் இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…