Breaking : கள்ளச்சாராயம் விற்போர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை ..! முதல்வர் அதிரடி உத்தரவு..!

Published by
லீனா

போதைப்பொருட்கள் விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதல்வர்  உத்தரவு 

கள்ள சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் மதுவிலக்கு துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் கள்ள சாராயத்தை தடுக்க மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என்றும், கள்ள சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கள்ள சாராயம், போதைப்பொருட்கள் விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறப்பாக செயல்படும் உயர் அதிகாரிகளே மதுவிலக்கு அமலாக்க பிரிவில் நியமிக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகளில் எரி சாராயம், மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் என்றும், மெத்தனாலை விஷ சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு குறித்து தகவல் அளிக்க 10581 என்ற எண் பயன்பாட்டில் உள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வாட்சப் எண்ணை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். வாட்ஸ் அப் மூலம் பெறும் புகார்களை கண்காணித்து எடுக்கும் தொடர் நடவடிக்கைகள் குறித்து உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை தோறும் முதல்வரின் அலுவலகத்திற்கு அறிக்கை தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

4 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

5 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

6 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

7 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

8 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

9 hours ago