ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாவையும் தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
தமிழ் புத்தாண்டையொட்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநர் தேநீர் விருந்தை, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்த சமயத்தில் இன்று ஆளுநர் ஆர்என் ரவியை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் திடீர் சந்திப்பு நிகழ்ந்தது. நீட் விலக்கு மசோதா, நுழைவுத்தேர்வு உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து உடனே ஒப்புதல் வழங்ககோரி வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
இதனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்கமாட்டார் என்றும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பது தமிழக மக்களின் உணர்வை புண்படுத்துவதாக அமையும் என்பதால் புறக்கணிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாவையும் தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் குறிப்பிட்டார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…