தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும்,11 ஆம் வகுப்பிற்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும்,12 ஆம் வகுப்பிற்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.இதனிடையே,கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது எனவும்,அதன்படி,கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்,கட்டணத்தில் மீதி தொகை செலுத்தாதவர்களுக்கும் பொதுத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,பொதுத்தேர்வில் எந்த ஒரு மாணவருக்காவது ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைத்தால்,சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க நேரிடும் மற்றும் அப்பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…
சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி…
திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள்…
கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும்…