தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் குலுக்கல் முறையில் ஒரு சுயேட்சை வேட்பாளர் தேர்ந்து தெடுக்கப்பட்டு உள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் உள்ள அய்யம்பாளையம் ஊராட்சியில் அடுத்த சின்ன ஓலைப்பாளையம் கிராமத்தில் சுயேட்சை வேட்பாளர்களாக அங்கப்பன் ,பொன்னுசாமி இருவரும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதைஅடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அங்கப்பன் , பொன்னுசாமி இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று இருந்தனர்.இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி ஹரிகரன் இருவருடைய ஒப்புதலுடன் குலுக்கல் முறையில் இருவரின் பெயரையும் ஒரு சீட்டில் எழுதி போட்டு இருவரின் முன்னிலை ஒருவர் சீட்டு எடுக்கப்பட்டது.அதில் அங்கப்பன் பெயர் இருந்ததால் அவர் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…