ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விரும்பத்தகாத நிகழ்வுகளான காவலர்களை தாக்கியது தொடர்பான வழக்குகளை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் திரும்பபெறப்படும் என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையின் போது முதல்வர் பழனிசாமி இதனை அறிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கம், ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெப்பதற்காக பல்வேறு பகுதிகளில் போரட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பொதுமக்கள் மீது வழக்குகள் போடப்பட்டு நிலுவையில் உள்ளது. ஆதலால், வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…