Breaking:கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவப்படுகொலை;13 பேர் குற்றவாளிகள் – கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு..!

கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விருதாச்சலத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில்,கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டனர்.மூக்கு,காது வழியாக விஷத்தை ஊற்றி இரண்டு பேரையும் உயிருடன் எரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து,இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.அதன்படி,இந்த வழக்கை சிபிஐ விசாரித்து,குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில்,கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025