வட சென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
அயோத்தி தாசப் பண்டிதரின் 175-ஆவது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழர், திராவிடம் ஆகிய வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழி புலவர் அயோத்தி தாசப் பண்டிதர் என முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொற்களின்றி நடத்த முடியாது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு சட்டப்பேரவையில் இருக்கக் கூடிய விடுதலை சிறுத்தைகள், பாமக, வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரவேற்றுள்ளனர்.
மேலும் அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம் வட சென்னையில் எந்த இடத்தில் அமைக்கப்படும், எத்தனை கோடி செலவில் கட்டப்படும் என்று வரும் நாட்களில் தமிழக அரசால் அரசாணை வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…