#BREAKING: இனி நவ.1 உள்ளாட்சி தினம்.. ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டம் – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக ஆட்சி அமைக்கும்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.

இதனால் இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படும் என தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டது. மேலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி, ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22 தண்ணீர் தினம் கொண்டாடப்படும் என்றும் நவம்பர் 1 உள்ளிட்ட ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு 4 முறை ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் நிலையில், இனி தண்ணீர் தினம் மார்ச் 22 மற்றும் நவ 1 ஆகிய தினங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.

1,19,000 ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்றும் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அரசின் அறிவிப்பால் 1.10 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனடைவர் என கூறினார். அமர்வுப்படி தொகை மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கு 5 மடங்கு உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சிறந்த ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது 2022ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும் என்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago