#Breaking:தமிழக ஆளுநருடன் ஓபிஎஸ்,இபிஎஸ் சந்திப்பு…!

Published by
Edison

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.குறிப்பாக,கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவைக்கு வெளியே பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,பேரவையை இரண்டு நாட்கள் அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,கோடநாடு வழக்கில் தன்னையும்,அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் சேர்க்க சதி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில்,பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,”கோடநாடு வழக்கில் அரசியல் தலையீடு இல்லை,பழிவாங்கும் எண்ணமோ இல்லை. மாறாக,நீதிமன்ற தீர்ப்பின்படியே விசாரணை நடைபெறுகிறது. அதன்படி, உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துள்ளனர்.அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர்.

ஆளுநரிடம் கோடநாடு விவகாரம் தொடர்பாகவும்,முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிஇடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக அவர்கள் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Edison

Recent Posts

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

13 hours ago

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

13 hours ago

பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க தலைமை…தவெக விஜய் கடும் தாக்கு!

சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…

14 hours ago

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…

14 hours ago

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

16 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

17 hours ago