கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், அதிமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ராஜகண்ணப்பன் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் 3,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ராஜகண்ணப்பன் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாக சில குழப்பங்கள் ஏற்பட்டது. முதலில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட இருந்தநிலையில் பின்னர், அதனை நிறுத்திவிட்டு ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இத்தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முழுமையாக விசாரிக்கப்படவேண்டும் என கூறி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது. மேலும், ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…