[Image Source : PTI]
இபிஎஸ்-க்கு எதிரான தேர்தல் குற்றசாட்டுகள் குறித்து காவல்துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் தடை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றசாட்டுகள் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவு மீறி விசாரணை நடத்தியதாக காவல் அதிகாரிகள் மீது ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து ஆணையிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்தியதால் காவல்துறை அதிகாரிகள் மீது எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளனர். இதனால், இபிஎஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும், இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையை பெரிதுபடுத்த வேண்டாம் என சேலம் போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யும்போது எடப்பாடி பழனிசாமி பிராமண பத்திரத்தில் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…