கடந்த 2012 ஆம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார்.இவரது சடலம் மார்ச் 29 ஆம் தேதி கல்லணை செல்லும் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு, கம்பிகளால் கட்டி காட்டில் வீசப்பட்டிருந்தது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து,காவல்துறையினர் 12 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.ஆனால்,அதில் பெரிதும் பலனிக்காததால்,வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.பின்னர் தமிழக காவல்துறையே இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயம் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில்,தொடர்ச்சியாக ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிதாக துப்பு கிடைத்துள்ளது,எனவே விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்று உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்படவுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம் ஜூன் 10 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…