கடந்த 2012 ஆம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார்.இவரது சடலம் மார்ச் 29 ஆம் தேதி கல்லணை செல்லும் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு, கம்பிகளால் கட்டி காட்டில் வீசப்பட்டிருந்தது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து,காவல்துறையினர் 12 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.ஆனால்,அதில் பெரிதும் பலனிக்காததால்,வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.பின்னர் தமிழக காவல்துறையே இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயம் மற்றொரு சகோதரர் […]