தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி, பொதுநிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.மேலும்,நிதிநிலை குறித்த அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்படும் என்று தகவல் முன்னதாக வெளியாகியது.
இந்நிலையில்,தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது வருகின்ற சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார் என்றும்,அவை,பொது பட்ஜெட்,வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…