#Breaking:தமிழக பட்ஜெட் தாக்கல் தேதி – கூட்டத்தில் முடிவு..!

Published by
Edison

தமிழக பட்ஜெட்  ஆகஸ்ட் 13 ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி, பொதுநிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.மேலும்,நிதிநிலை குறித்த அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்படும் என்று தகவல் முன்னதாக வெளியாகியது.

இந்நிலையில்,தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது வருகின்ற சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார் என்றும்,அவை,பொது பட்ஜெட்,வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Edison

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

19 minutes ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

2 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

3 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

3 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

4 hours ago