#BREAKING: சனிக்கிழமையும் இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சனிக்கிழமைகளில் இறைச்சி, மீன் கடைகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் போதே, மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, இன்று அந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மே 1ம் தேதி சனிக்கிழமை அன்றும் இறைச்சி கடைகள், மீன் மார்கெட்டுகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் தடையை மீறி இறைச்சி விற்பனை கடைகளை திறந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தமிழக அரசு எச்சரித்துள்ளது

மேலும் ஏற்கனவே அமலில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தால், சனிக்கிழமை அன்று இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் அதிகம் குவிவதால் சனிக்கிழமையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago